செவ்வாயுடன் கிரகங்கள்
கூட
செவ்வாயும் சனியும்
சேர அல்லது ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள கால தாமத திருமணம் நடக்கும். அல்லது
தகுதிக்கு கீழுள்ள இடத்தில் தான் திருமணம் நடைபெறும். அல்லது திருமணத்துக்கு பின்
ஏதேனும் ஒரு குறை இருந்து கொண்டே இருக்கும். அல்லது கணவன் கெட்ட பழக்க வழக்கம்
கொண்டவன் ஆவான். அல்லது கணவனுக்கு தீராத நோய் வருவதால் சுகம் அனுபவிக்க இயலாது.
செவ்வாயும் இராகுவும்
கூட திருமணத்தில் தடைகள் உண்டாகும். அல்லது கணவனுக்கு தீராத நோய் உண்டாகும்.
அல்லது வேலை விஷயமாக பிரிந்து வாழ நேரும். சகோதரர் மூலம் சண்டை ஏற்பட்டு
பிரியலாம்.
செவ்வாயும் கேதுவும்
கூட அல்லது பரஸ்பரம் பார்த்து கொள்ள, திருமணத்தில் தடைகள் உண்டாகும். அல்லது
கணவனுக்கு ஆண்மை இல்லாது போகும். அல்லது கணவன் அல்லது மனைவி சந்நியாசி போல்
இருப்பதால் இல்லற வாழ்வு பாதிக்கும்.
செவ்வாய் தோஷத்தில்
செவ்வாயே பாதிக்கப்பட்டால் செவ்வாய் கிழமையில் முருகனை வழிபட வேண்டும். செவ்வாயை
சனி பாதித்தால், அனுமனை அல்லது அய்யனாரை அல்லது ஐயப்பனை செவ்வாய் மற்றும்
சனிக்கிழமைகளில் வழிபட வேண்டும்.
செவ்வாய் இராகுவால்
பாதிக்கப்பட்டால், காளியை, மாரியம்மனை, செவ்வாய் கிழமையில் வணங்கி வர வேண்டும். செவ்வாய்
கேதுவால் பாதிக்கப்பட்டால், விநாயகரை, காளியை, மாரியை செவ்வாய் கிழமையில் வணங்கி
வர வேண்டும்.
செவ்வாயுடன் புதன்
கூடுகையில் அல்லது அவர் மட்டும் பார்க்கையில் ஜாதகன் அல்லது அவனது மனைவி
அந்நியருடன் கூடும் அவலம் ஏற்படுமாம்.
செவ்வாயுடன் சனி
சேர்கையில் செவ்வாய் தோஷம் இல்லாது போகின்றது என்றோம். ஆனால் இல்லற வாழ்வில்
பிரச்சினையை கொடுக்காது போகாது என்பதை அறிக.
No comments:
Post a Comment