23. சுந்தர சேகரத்தின் சிறப்பு
ஜோதிடத்தில் என்னை கவர்ந்த நூல்கள் பல உள்ளன. என்றாலும் சுந்தர சேகரம் என்னை முழுமையாக கவர்ந்துள்ளது. அதனை வாங்கி அனுபவித்து படித்து பாருங்கள்! உண்மை புரியும்.
எந்த ஒரு பாவமும் ஒரு நீச்சனால் பார்வை அடைவதோ அல்லது நீச்சனை கொண்டிருப்பதோ கூடாதாம். அவ்வீட்டில் அக்கிரகத்தின் காரக பலனை அவ்வீடு இழக்கும்.
எந்த ஒரு கிரகமும் ஒரு நீச்சனுடன் கூடுவதோ அல்லது நீச்சனால் பார்க்கப்படுவதோ கூடாதாம்.
சந்திரனுடன் நீச்ச சனி சேர அன்னை மோசமானவளாம். நோயாளியும் ஆவாள். அன்னையை பிரிய நேரும்.
நீச்ச சுக்கிரன் சேர அன்னை சதா உடலுறவில் மூழ்கி இருப்பாள். சோம்பேறியும் கூட! நீண்ட ஆயுள் உள்ளவள் ஆவாள்.
நீச்ச குருவுடன் கூட அன்னை நீண்ட ஆயுள் உள்ளவள் மட்டும் அல்ல. ஜாதகனை பின்னுக்கு தள்ளி விடும் சண்டிக் குதிரையாய் இருப்பாள். இவள் ஜாதகனை விட்டு பிரியவும் மாட்டாள். ஆனால் யாரையும் நிம்மதியாய் வைத்து கொள்ள மாட்டாள்.
நீச்ச புதனுடன் சந்திரன் சேர அன்னையவள் அறிவற்றவளும் சண்டை வலிப்பவளும் ஆவாள். ஆனால் நீண்ட காலம் வாழ்வாள். இவளிடம் வாய் கொடுத்து யாரும் மீள இயலாது.
நீச்ச செவ்வாயுடன் கூட அன்னையவள் போராடும் குணமும் சண்டைக் கோழியும் ஆவாள். ஒருசிலர் சீக்கிரமே இறந்து போகவும் நேரும். ஆனாலும் இங்கு செவ்வாய் நீச்ச பங்கம் ஆவதால் அவ்வளவு மோசமான அன்னை யானாலும் பின்னாளில் சிறந்தவளாய் மாறுவாளாம்.
சந்திரன் நீச்ச சூரியனுடன் சேர அன்னையவள் நோயாளி ஆவாள். யாருடனும் ஒத்து போக மாட்டாள்.
இதுபோல ஒவ்வொரு கிரகத்துக்கும் பார்க்கவும்.
நீசமான கிரகம் தனிக்க, அது எந்த கிரகமோ அந்த கிரகத்தின் உறவினர் குறை ஆயுள் உள்ளவராக அல்லது நோயாளியாக அல்லது ஜாதகருக்கு பிரயோஜனம் அற்றவராக ஆகி விடுவார்.
ஒரு ஜாதகத்தில் லக்கினம், தன பாவம், பத்தாமிடம், இலாபம் ஆகியவை அந்த ஜாதகருக்கு மற்றவரால் வரும் நன்மை அல்லது உதவி அல்லது கேடு போன்றவற்றை சொல்லும் இடமாகும்.
ஆகவே மேற்சொன்ன இடங்களில் நீச்ச கிரகம் இருக்க, அந்த கிரகம் குறிக்கும் கிரக உறவினர் யாரோ அவரால் ஜாதகன் முன்னேறவோ அல்லது உதவி அடையவோ மாட்டான். மாறாக அவர்களால் ஜாதகனுக்கு முட்டுக் கட்டையும், இன்னல்களும், அவமரியாதையும் உண்டாகும்.
பன்னிரண்டாம் இடமும் ஒரு ஜாதகனுக்கு விரயத்தை சொல்லும் இடமாம். அதாவது ஜாதகன் பின்னாளில் வேறொருவருக்கு பண உதவி செய்ய நேரும் இடம் எனலாம். ஆகவே விரைய பாவத்தில் எந்த கிரகம் நட்பு, ஆட்சி, உச்சம் பெற்றுள்ளதோ, அக்கிரக உறவினரின் உதவியை ஜாதகனின் இளமையில் அடைவான். அந்த நன்றி கடனை தீர்க்க, பின்னாளில் அந்த உறவினருக்கு கண்ணை மூடி கொண்டு ஜாதகன் செலவு செய்வானாம்.
மேற்சொன்ன இடங்களில் நின்ற அசுபத்வ கிரக உறவினரும் ஜாதகனை விட மாட்டார்களாம். அப்படிப்பட்ட உறவினர்களை காலப் போக்கில் ஜாதகனே கழற்றி விட்டு விடுவான்.
நீச்சம் என்று வந்த பிறகு, நீச்ச பங்கத்தை சொல்லாமல் போனால் அது நன்றாய் இராது.
ஒரு கிரகம் நீச்சம் ஆகி, அவர் வர்க்கோத்தமம் ஆனால் (இராசியிலும் அம்சையிலும் ஒரே பாவத்தில் இருப்பதை வர்க்கோத்தமம் என்பர்)
அல்லது வக்கிரம் ஆனால்
அல்லது அவ்விரண்டு நிலையையும் பெற்றால்
அல்லது நீச்சன் நின்ற அதிபதி இராசியில் ஆட்சி அல்லது உச்சம் ஆனால் அல்லது நீசன் நின்ற இராசியின் உச்ச கிரகம் இராசியில் ஆட்சி அல்லது உச்சமாக
அல்லது நீச்சனுடன் அவரது நட்பு கிரகம் உச்சமாகி கூட
அல்லது நீசன் அம்சையில் ஆட்சி அல்லது உச்சமாக
நீச்ச கிரகம் தனது நீச்ச நிலையிலிருந்து உயர்ந்து நீச்ச பங்க இராஜ யோகத்தை செய்யும்.
ஆனால் இந்த யோகம் ஜாதகன் பிறந்தவுடன் நிகழாது. முப்பது வயது வரை ஜாதகனையும் அவனது குடும்பத்தாரையும் பலவிதமாக பாதிக்கும். அந்த முப்பது வயதுக்கும் மேல் திடீரென்று ஒரு வாய்ப்பு வந்து அதன் மூலம் ஜாதகன் வெகுவாய் முன்னேறி விடுவான்.
அதன் பின் அவன் வாழ்வில் சரிவென்பதே இராது. ஆனாலும் நீச்ச கிரகத்தின் உறவினர் இவனை இவனது அறுபது வயது வாக்கில் படுத்தி எடுத்து விடுவார்.
இன்னும் சொல்ல வேண்டியுள்ளது.
அடுத்த பகுதிக்கு செல்வோம்.
அன்பன்
அ .வீ . மாரிமுத்து 03 - 08 - 2016
ஜோதிடத்தில் என்னை கவர்ந்த நூல்கள் பல உள்ளன. என்றாலும் சுந்தர சேகரம் என்னை முழுமையாக கவர்ந்துள்ளது. அதனை வாங்கி அனுபவித்து படித்து பாருங்கள்! உண்மை புரியும்.
எந்த ஒரு பாவமும் ஒரு நீச்சனால் பார்வை அடைவதோ அல்லது நீச்சனை கொண்டிருப்பதோ கூடாதாம். அவ்வீட்டில் அக்கிரகத்தின் காரக பலனை அவ்வீடு இழக்கும்.
எந்த ஒரு கிரகமும் ஒரு நீச்சனுடன் கூடுவதோ அல்லது நீச்சனால் பார்க்கப்படுவதோ கூடாதாம்.
சந்திரனுடன் நீச்ச சனி சேர அன்னை மோசமானவளாம். நோயாளியும் ஆவாள். அன்னையை பிரிய நேரும்.
நீச்ச சுக்கிரன் சேர அன்னை சதா உடலுறவில் மூழ்கி இருப்பாள். சோம்பேறியும் கூட! நீண்ட ஆயுள் உள்ளவள் ஆவாள்.
நீச்ச குருவுடன் கூட அன்னை நீண்ட ஆயுள் உள்ளவள் மட்டும் அல்ல. ஜாதகனை பின்னுக்கு தள்ளி விடும் சண்டிக் குதிரையாய் இருப்பாள். இவள் ஜாதகனை விட்டு பிரியவும் மாட்டாள். ஆனால் யாரையும் நிம்மதியாய் வைத்து கொள்ள மாட்டாள்.
நீச்ச புதனுடன் சந்திரன் சேர அன்னையவள் அறிவற்றவளும் சண்டை வலிப்பவளும் ஆவாள். ஆனால் நீண்ட காலம் வாழ்வாள். இவளிடம் வாய் கொடுத்து யாரும் மீள இயலாது.
நீச்ச செவ்வாயுடன் கூட அன்னையவள் போராடும் குணமும் சண்டைக் கோழியும் ஆவாள். ஒருசிலர் சீக்கிரமே இறந்து போகவும் நேரும். ஆனாலும் இங்கு செவ்வாய் நீச்ச பங்கம் ஆவதால் அவ்வளவு மோசமான அன்னை யானாலும் பின்னாளில் சிறந்தவளாய் மாறுவாளாம்.
சந்திரன் நீச்ச சூரியனுடன் சேர அன்னையவள் நோயாளி ஆவாள். யாருடனும் ஒத்து போக மாட்டாள்.
இதுபோல ஒவ்வொரு கிரகத்துக்கும் பார்க்கவும்.
நீசமான கிரகம் தனிக்க, அது எந்த கிரகமோ அந்த கிரகத்தின் உறவினர் குறை ஆயுள் உள்ளவராக அல்லது நோயாளியாக அல்லது ஜாதகருக்கு பிரயோஜனம் அற்றவராக ஆகி விடுவார்.
ஒரு ஜாதகத்தில் லக்கினம், தன பாவம், பத்தாமிடம், இலாபம் ஆகியவை அந்த ஜாதகருக்கு மற்றவரால் வரும் நன்மை அல்லது உதவி அல்லது கேடு போன்றவற்றை சொல்லும் இடமாகும்.
ஆகவே மேற்சொன்ன இடங்களில் நீச்ச கிரகம் இருக்க, அந்த கிரகம் குறிக்கும் கிரக உறவினர் யாரோ அவரால் ஜாதகன் முன்னேறவோ அல்லது உதவி அடையவோ மாட்டான். மாறாக அவர்களால் ஜாதகனுக்கு முட்டுக் கட்டையும், இன்னல்களும், அவமரியாதையும் உண்டாகும்.
பன்னிரண்டாம் இடமும் ஒரு ஜாதகனுக்கு விரயத்தை சொல்லும் இடமாம். அதாவது ஜாதகன் பின்னாளில் வேறொருவருக்கு பண உதவி செய்ய நேரும் இடம் எனலாம். ஆகவே விரைய பாவத்தில் எந்த கிரகம் நட்பு, ஆட்சி, உச்சம் பெற்றுள்ளதோ, அக்கிரக உறவினரின் உதவியை ஜாதகனின் இளமையில் அடைவான். அந்த நன்றி கடனை தீர்க்க, பின்னாளில் அந்த உறவினருக்கு கண்ணை மூடி கொண்டு ஜாதகன் செலவு செய்வானாம்.
மேற்சொன்ன இடங்களில் நின்ற அசுபத்வ கிரக உறவினரும் ஜாதகனை விட மாட்டார்களாம். அப்படிப்பட்ட உறவினர்களை காலப் போக்கில் ஜாதகனே கழற்றி விட்டு விடுவான்.
நீச்சம் என்று வந்த பிறகு, நீச்ச பங்கத்தை சொல்லாமல் போனால் அது நன்றாய் இராது.
ஒரு கிரகம் நீச்சம் ஆகி, அவர் வர்க்கோத்தமம் ஆனால் (இராசியிலும் அம்சையிலும் ஒரே பாவத்தில் இருப்பதை வர்க்கோத்தமம் என்பர்)
அல்லது வக்கிரம் ஆனால்
அல்லது அவ்விரண்டு நிலையையும் பெற்றால்
அல்லது நீச்சன் நின்ற அதிபதி இராசியில் ஆட்சி அல்லது உச்சம் ஆனால் அல்லது நீசன் நின்ற இராசியின் உச்ச கிரகம் இராசியில் ஆட்சி அல்லது உச்சமாக
அல்லது நீச்சனுடன் அவரது நட்பு கிரகம் உச்சமாகி கூட
அல்லது நீசன் அம்சையில் ஆட்சி அல்லது உச்சமாக
நீச்ச கிரகம் தனது நீச்ச நிலையிலிருந்து உயர்ந்து நீச்ச பங்க இராஜ யோகத்தை செய்யும்.
ஆனால் இந்த யோகம் ஜாதகன் பிறந்தவுடன் நிகழாது. முப்பது வயது வரை ஜாதகனையும் அவனது குடும்பத்தாரையும் பலவிதமாக பாதிக்கும். அந்த முப்பது வயதுக்கும் மேல் திடீரென்று ஒரு வாய்ப்பு வந்து அதன் மூலம் ஜாதகன் வெகுவாய் முன்னேறி விடுவான்.
அதன் பின் அவன் வாழ்வில் சரிவென்பதே இராது. ஆனாலும் நீச்ச கிரகத்தின் உறவினர் இவனை இவனது அறுபது வயது வாக்கில் படுத்தி எடுத்து விடுவார்.
இன்னும் சொல்ல வேண்டியுள்ளது.
அடுத்த பகுதிக்கு செல்வோம்.
அன்பன்
அ .வீ . மாரிமுத்து 03 - 08 - 2016
No comments:
Post a Comment