18. லக்கினமும் சுப அசுபர்களும்
பொதுவாக சூரியன், செவ்வாய், சனி, இராகு, கேது ஆகியோரை அசுபர் என்றும், சந்திரன், புதன், குரு, சுக்கிரன் ஆகியோரை சுபர் என்றும் சொல்வதுண்டு. ஆனால் முற்றும் உணர்ந்த ஜோதிடர் தேய்பிறை சந்திரனையும் அசுபர் என்றே கருதுவர். அதுபோல சுபருடன் சேர்ந்த புதனை சுபர் என்றும், அசுபருடன் சேர்ந்த புதனை அசுபர் என்றும் குறிப்பிடுவர்.
சுபர்களில் கூட குருவை முழு சுபர் என்றும், சுக்கிரனை முக்கால் சுபர் என்றும், புதனை அரை சுபர் என்றும் அழைப்பதுண்டு.
சந்திரன் வளர்பிறையிலும், சுபருடன் கூடிய நிலையிலும் முற்றிலும் சுபர் ஆகின்றார். அவரே தேய் பிறையிலும், அசுபருடன் கூடிய நிலையிலும் அசுபர் ஆகின்றார்.
ஆனால் இவ்விதிகளை ஒவ்வொரு லக்கினமும் அப்படியே ஏற்று கொள்வதில்லை. அவற்றுக்கு காரணத்தையும் விதிகளாக்கி ஜோதிட வல்லுனர்கள் நமக்கு தந்துள்ளார்கள்.
லக்கினாதிபதியே சூரியன் அல்லது சந்திரன் ஆனால் அவர்கள் நல்லவராம்.
இவ்விதி கடகம் மற்றும் சிம்மத்துக்கு பொருந்தும்.
லக்கினாதிபதியே எட்டாமாதியும் ஆனால் அவர் பூரண சுபர் ஆவாராம். இவ்விதி மேஷத்துக்கும் துலாத்துக்கும் மட்டுமே பொருந்தும்லு. ஆனாலும் இவர் எட்டில் அமர்ந்தால் சுமார் பலனையும், லக்கினத்தில் அமர்ந்தால் உயர் பலனையும் தருவர் என்றும் ஒரு சாரார் சொல்வர்.
ஆட்சி பெற்ற கிரகம் தனித்தால் அவர் அவ்வீட்டின் கார பலனை உயர்த்தியும், காரக பலனை தாழ்த்தியும் விடுவார் என்பது இன்னொரு சாரார் சொல்லும் விதியாகும்.
ஒரு கிரகம் தன்னுடன் இன்னொரு கிரகம் இல்லாமலும் அல்லது இன்னொரு கிரகத்தால் பார்க்கப் படாமலும் இருத்தலை தனித்துள்ளது என்று குறிப்பர்.
மகர லக்கினம் என்று கொண்டு நான்கில் செவ்வாய் ஆட்சி பெற்று தனித்து நிற்க - இவர் நான்காமாதி ஆகி நான்கில் அமர்ந்துள்ளதால் - இதனை கார பலன் என்பர் - நீண்ட ஆயுளுடைய அன்னை இருப்பாள் எனலாம். நான்கில் பூமி காரகராம் செவ்வாய் இருப்பதால் - இதனை காரக பலன் என்பர் - இந்த ஜாதகருக்கு நிலபுலம் இல்லாது போகும் என்றும், அப்படியே பூர்வீக நிலபுலம் இருப்பினும் அவற்றை அனுபவிக்க இயலாது போகும் என்றும் - அல்லது அப்பூமியை விற்று தொலைப்பான் என்றும் சொல்லலாம்.
நான்கில் செவ்வாய் உள்ளதால் - அவர் அசுபர் ஆவதால் - அன்னை நீண்ட ஆயுள் கொண்டவள் ஆயினும் - ஜாதகனை வெறுப்பாள் அல்லது பிரிந்திருப்பாள் எனலாம்.
லக்கினாதிபதியே ஆறாமாதியானால் அவரை அசுபர் என்றே கொள்ள வேண்டும். என்றாலும் இவர் கேந்திர கோணத்தில் சுபத்வம் அடைந்து, சுபரால் மட்டும் பார்க்கப்பட, இவரை சுபர் என்று கொள்ளலாம். இவர் ஆறு, எட்டு, பன்னிரண்டில் நட்பு ஆட்சி, உச்சமாகி சுபர் பார்வை அடைய - கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் இராஜ யோகம் என்னும் விதியின்படி - விபரீத இராஜ யோகத்தையும் செய்ய தயாராகி விடுவார். ஆனால் மறைவிடத்தில் உள்ள இந்த லக்கினாதிபதி, எக்காரணம் கொண்டும் அசுபத்வம் அடைந்தும் பாவியின் சேர்க்கையோ அல்லது பார்வையோ பெற கூடாது. அது அவ்வாறாயின் அவர் முழு பாவி ஆவது நிச்சயம்.
லக்கினாதிபதியே நான்காம் அதிபதியானால் அவர் கேந்திர தோஷமும் அடைவதால், அது நல்லது அல்ல. ஒருவேளை இவர் லக்கினம், கோணம், தன இலாபத்தில் வலுவாய் இருக்க அவரை சுபர் எனலாம். நான்கு ஏழு பத்தில் இவர் இருப்பது கேந்திர தோஷத்தை கொடுக்கும்.
இவ்வித அமைப்பு மிதுனம் மற்றும் தனுசு ஆகிய லக்கினங்களுக்கே பொருந்தும். மிதுனம் லக்கினமாகி புதன் அசுபருடன் கூடினால் அவர் லக்கினத்தில் அமர்தல் கூடாதாம். மாறாக அவர் நான்கு, ஏழு, பத்தில் அமரலாம். அவர் நன்மையே செய்வாராம். அசுபருடன் சேர்ந்த புதன் அசுபர் ஆவதால், அவர் நான்கு, ஏழு, பத்தில் அமர்தல் நல்லதையே செய்யும். ஆனால் அவர் லக்கினத்தில் அமர்வது தீமையை மட்டும் செய்யும்.
இந்த புதன் நல்லவரோ அல்லது கெட்டவரோ கோணத்தில் சுபத்வம் அடைந்து சுபரால் பார்க்கப்பட்டிருக்க உயர் பலனை செய்வாராம்.
லக்கினாதிபதியே பத்தாமாதியும் ஆனால் அவர் கோணம்,, லக்கினம், தன, இலாபத்தில் சிறக்க சுபர் பார்வை அல்லது சேர்க்கையுடன் இருக்கலாம். எக்காரணம் கொண்டும் நான்கு, ஏழு, பத்து மற்றும் மறைவிடங்களில் அசுபத்வம் அடைந்து நிற்றல் கூடாது.
கன்னி மற்றும் மீனம் ஆகிய லக்கினங்களுக்கு மட்டுமே இது பொருந்தும்.
ஆனால் கன்னி லக்கினத்துக்கு மட்டும் அசுபருடன் சேர்ந்த புதன் லக்கினம் தவிர்த்த மற்றைய கேந்திரங்களில் சுபர் பார்வையுடன் நிற்கலாம். சுபருடன் சேர்ந்த புதன் லக்கினத்தில் மட்டும் அமரலாம். ஆனால் கோணத்தில் - நல்லவரோ அல்லது கெட்டவரோ - புதன் அமர்ந்து வலுவும் சுபத்வமும் அடைய உயர் பலனாம்.
லக்கினாதிபதியே இரண்டாம் அதிபதியானால் அவர் சுபரும் மாரகரும் ஆகின்றார். இது மகர லக்கினத்துக்கு மட்டுமே பொருந்தும்
.
இந்த லக்கினாதிபதி கேந்திரம், கோணம், தனம், இலாபத்தில் நட்பு, ஆட்சி, உச்சம் அடைந்து இருப்பது நல்லதாம். இவர் மற்ற மாரக பாவங்களில் அசுபத்வமும், அசுபர்களின் சம்பந்தமும் பெற்று நிற்பது தீயதாம். இவர் மறைவிடங்களில் அசுபத்வம் அடைவது தீதாம்.
லக்கினாதிபதியே பன்னிரண்டாம் அதிபதி ஆனால், அவரை சுபர் என்றே கொள்ள வேண்டும். இது கும்ப லக்கினத்துக்கு மட்டுமே பொருந்தும். இவர் கேந்திர, கோணத்தில் சுபத்வம் மற்றும் சுபர் சகிதம் இருக்க, உயர் பலனை நல்குவர். மறைவிடத்தில் அசுபத்வம் அடைவது தீதாம்.
இனி இரண்டாம் அதிபதி நல்லவரா அல்லது கெட்டவரா என அடுத்த பகுதியில் காண்போம்.
அன்பன்
அ .வீ. மாரிமுத்து 01 -08 -2016
பொதுவாக சூரியன், செவ்வாய், சனி, இராகு, கேது ஆகியோரை அசுபர் என்றும், சந்திரன், புதன், குரு, சுக்கிரன் ஆகியோரை சுபர் என்றும் சொல்வதுண்டு. ஆனால் முற்றும் உணர்ந்த ஜோதிடர் தேய்பிறை சந்திரனையும் அசுபர் என்றே கருதுவர். அதுபோல சுபருடன் சேர்ந்த புதனை சுபர் என்றும், அசுபருடன் சேர்ந்த புதனை அசுபர் என்றும் குறிப்பிடுவர்.
சுபர்களில் கூட குருவை முழு சுபர் என்றும், சுக்கிரனை முக்கால் சுபர் என்றும், புதனை அரை சுபர் என்றும் அழைப்பதுண்டு.
சந்திரன் வளர்பிறையிலும், சுபருடன் கூடிய நிலையிலும் முற்றிலும் சுபர் ஆகின்றார். அவரே தேய் பிறையிலும், அசுபருடன் கூடிய நிலையிலும் அசுபர் ஆகின்றார்.
ஆனால் இவ்விதிகளை ஒவ்வொரு லக்கினமும் அப்படியே ஏற்று கொள்வதில்லை. அவற்றுக்கு காரணத்தையும் விதிகளாக்கி ஜோதிட வல்லுனர்கள் நமக்கு தந்துள்ளார்கள்.
லக்கினாதிபதியே சூரியன் அல்லது சந்திரன் ஆனால் அவர்கள் நல்லவராம்.
இவ்விதி கடகம் மற்றும் சிம்மத்துக்கு பொருந்தும்.
லக்கினாதிபதியே எட்டாமாதியும் ஆனால் அவர் பூரண சுபர் ஆவாராம். இவ்விதி மேஷத்துக்கும் துலாத்துக்கும் மட்டுமே பொருந்தும்லு. ஆனாலும் இவர் எட்டில் அமர்ந்தால் சுமார் பலனையும், லக்கினத்தில் அமர்ந்தால் உயர் பலனையும் தருவர் என்றும் ஒரு சாரார் சொல்வர்.
ஆட்சி பெற்ற கிரகம் தனித்தால் அவர் அவ்வீட்டின் கார பலனை உயர்த்தியும், காரக பலனை தாழ்த்தியும் விடுவார் என்பது இன்னொரு சாரார் சொல்லும் விதியாகும்.
ஒரு கிரகம் தன்னுடன் இன்னொரு கிரகம் இல்லாமலும் அல்லது இன்னொரு கிரகத்தால் பார்க்கப் படாமலும் இருத்தலை தனித்துள்ளது என்று குறிப்பர்.
மகர லக்கினம் என்று கொண்டு நான்கில் செவ்வாய் ஆட்சி பெற்று தனித்து நிற்க - இவர் நான்காமாதி ஆகி நான்கில் அமர்ந்துள்ளதால் - இதனை கார பலன் என்பர் - நீண்ட ஆயுளுடைய அன்னை இருப்பாள் எனலாம். நான்கில் பூமி காரகராம் செவ்வாய் இருப்பதால் - இதனை காரக பலன் என்பர் - இந்த ஜாதகருக்கு நிலபுலம் இல்லாது போகும் என்றும், அப்படியே பூர்வீக நிலபுலம் இருப்பினும் அவற்றை அனுபவிக்க இயலாது போகும் என்றும் - அல்லது அப்பூமியை விற்று தொலைப்பான் என்றும் சொல்லலாம்.
நான்கில் செவ்வாய் உள்ளதால் - அவர் அசுபர் ஆவதால் - அன்னை நீண்ட ஆயுள் கொண்டவள் ஆயினும் - ஜாதகனை வெறுப்பாள் அல்லது பிரிந்திருப்பாள் எனலாம்.
லக்கினாதிபதியே ஆறாமாதியானால் அவரை அசுபர் என்றே கொள்ள வேண்டும். என்றாலும் இவர் கேந்திர கோணத்தில் சுபத்வம் அடைந்து, சுபரால் மட்டும் பார்க்கப்பட, இவரை சுபர் என்று கொள்ளலாம். இவர் ஆறு, எட்டு, பன்னிரண்டில் நட்பு ஆட்சி, உச்சமாகி சுபர் பார்வை அடைய - கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் இராஜ யோகம் என்னும் விதியின்படி - விபரீத இராஜ யோகத்தையும் செய்ய தயாராகி விடுவார். ஆனால் மறைவிடத்தில் உள்ள இந்த லக்கினாதிபதி, எக்காரணம் கொண்டும் அசுபத்வம் அடைந்தும் பாவியின் சேர்க்கையோ அல்லது பார்வையோ பெற கூடாது. அது அவ்வாறாயின் அவர் முழு பாவி ஆவது நிச்சயம்.
லக்கினாதிபதியே நான்காம் அதிபதியானால் அவர் கேந்திர தோஷமும் அடைவதால், அது நல்லது அல்ல. ஒருவேளை இவர் லக்கினம், கோணம், தன இலாபத்தில் வலுவாய் இருக்க அவரை சுபர் எனலாம். நான்கு ஏழு பத்தில் இவர் இருப்பது கேந்திர தோஷத்தை கொடுக்கும்.
இவ்வித அமைப்பு மிதுனம் மற்றும் தனுசு ஆகிய லக்கினங்களுக்கே பொருந்தும். மிதுனம் லக்கினமாகி புதன் அசுபருடன் கூடினால் அவர் லக்கினத்தில் அமர்தல் கூடாதாம். மாறாக அவர் நான்கு, ஏழு, பத்தில் அமரலாம். அவர் நன்மையே செய்வாராம். அசுபருடன் சேர்ந்த புதன் அசுபர் ஆவதால், அவர் நான்கு, ஏழு, பத்தில் அமர்தல் நல்லதையே செய்யும். ஆனால் அவர் லக்கினத்தில் அமர்வது தீமையை மட்டும் செய்யும்.
இந்த புதன் நல்லவரோ அல்லது கெட்டவரோ கோணத்தில் சுபத்வம் அடைந்து சுபரால் பார்க்கப்பட்டிருக்க உயர் பலனை செய்வாராம்.
லக்கினாதிபதியே பத்தாமாதியும் ஆனால் அவர் கோணம்,, லக்கினம், தன, இலாபத்தில் சிறக்க சுபர் பார்வை அல்லது சேர்க்கையுடன் இருக்கலாம். எக்காரணம் கொண்டும் நான்கு, ஏழு, பத்து மற்றும் மறைவிடங்களில் அசுபத்வம் அடைந்து நிற்றல் கூடாது.
கன்னி மற்றும் மீனம் ஆகிய லக்கினங்களுக்கு மட்டுமே இது பொருந்தும்.
ஆனால் கன்னி லக்கினத்துக்கு மட்டும் அசுபருடன் சேர்ந்த புதன் லக்கினம் தவிர்த்த மற்றைய கேந்திரங்களில் சுபர் பார்வையுடன் நிற்கலாம். சுபருடன் சேர்ந்த புதன் லக்கினத்தில் மட்டும் அமரலாம். ஆனால் கோணத்தில் - நல்லவரோ அல்லது கெட்டவரோ - புதன் அமர்ந்து வலுவும் சுபத்வமும் அடைய உயர் பலனாம்.
லக்கினாதிபதியே இரண்டாம் அதிபதியானால் அவர் சுபரும் மாரகரும் ஆகின்றார். இது மகர லக்கினத்துக்கு மட்டுமே பொருந்தும்
.
இந்த லக்கினாதிபதி கேந்திரம், கோணம், தனம், இலாபத்தில் நட்பு, ஆட்சி, உச்சம் அடைந்து இருப்பது நல்லதாம். இவர் மற்ற மாரக பாவங்களில் அசுபத்வமும், அசுபர்களின் சம்பந்தமும் பெற்று நிற்பது தீயதாம். இவர் மறைவிடங்களில் அசுபத்வம் அடைவது தீதாம்.
லக்கினாதிபதியே பன்னிரண்டாம் அதிபதி ஆனால், அவரை சுபர் என்றே கொள்ள வேண்டும். இது கும்ப லக்கினத்துக்கு மட்டுமே பொருந்தும். இவர் கேந்திர, கோணத்தில் சுபத்வம் மற்றும் சுபர் சகிதம் இருக்க, உயர் பலனை நல்குவர். மறைவிடத்தில் அசுபத்வம் அடைவது தீதாம்.
இனி இரண்டாம் அதிபதி நல்லவரா அல்லது கெட்டவரா என அடுத்த பகுதியில் காண்போம்.
அன்பன்
அ .வீ. மாரிமுத்து 01 -08 -2016
No comments:
Post a Comment