Saturday, July 30, 2016

வாலாய் இருந்தாலும் சாதிக்கும் அது அனுமனது ஆனால்

15. கேந்திரம், கோணம் போன்றவை

ஒரு ஜாதகத்தில் லக்கினம் கிழக்கையும், பத்தாமிடம் தெற்கையும், ஏழாமிடம் மேற்கையும், நான்காமிடம் வடக்கையும் குறிக்கும் இடங்களாகும். இதனை கேந்திர பாவங்கள் என்று சொல்வர். இதனை விஷ்ணு பாவம் என்றும் குறிப்பிடுவர்.

இந்த விஷ்ணு அசுரர்களை அழிப்பதுவும் உண்டு. நம்பியவர்களையும் தேவர்களையும் காப்பதுவும் உண்டு. ஆக இந்த பாவங்கள் சுபத்வம் அடைந்து இருந்தால், உயரிய நல்ல பலன்களை தரும். அசுபத்வம் அடைந்தால தீமையும் செய்யும்.
அதனை பின்னர் பார்க்கலாம்.

1, 5, 9 ஆகிய இடங்கள் ஒன்றுக்கொன்று 120 பாகையில் அமைந்த பாவங்களாகும். இவை புண்ணிய பாவங்களாகும். இவற்றை லட்சுமீ பாவம் என்பர்.

இவை சுப பாவங்களாகவும், சுபர் அமையப் பெற்றோ அல்லது சுபர் மட்டும் பார்த்திருந்தோ அமைய, உயர் பலன் மட்டுமே நடக்கும்.

அசுபர் இவ்வீடுகளில் அமர்ந்தாலும், அக்கிரகம் வலுவடையும் என்பர்.
ஆனால் அசுபர் மட்டும்அ அங்கு அமர, ஜாதகனின் குணங்களில் அல்லது பொருளாதார நிலையில் தொய்வு உண்டாகும் எனலாம்.

லக்கினத்துக்கு 6, 8, 12 ஆகிய இடங்கள் முற்றிலும் அசுப பாவங்களாம். இந்த பாவங்களுள் எது அசுபரது (சூரியன், செவ்வாய், சனியின்வீடுகள்) பாவங்களாய் உள்ளதோ  அது வெகு மோசமான அசுப பாவம் ஆகின்றது.  இந்த 6, 8, 12 மாதிகளும் அசுபராம். அதிலும் அசுப கிரகமாகிட இன்னும் அதிக அசுபராய் விளங்குவர்.

அதுபோலவே, பொதுவாக கேந்திராதிபதிகள் நல்லவர்கள் தாம்!
ஆனால் எல்லா கேந்திராதிபதிகளும் நல்லவர் அல்ல. அசுபராகிய சூரியன், செவ்வாய், சனி, ஆகியோர் கேந்திராதிகள் ஆனால், அவர்கள் நல்லவர்களே. என்றாலும் இவர்கள் நின்ற இடம் கொஞ்சம் பாதிப்பை அடையலாம்.

வெள்ளை ஆடையில் பட்ட ஒரு துளி அழுக்கு பெரிதாக தெரிவது போல், சுபர்களாகிய சந்திரன், புதன், குரு, சுக்கிரன் ஆகியோர் கேந்திர தோஷம் அடைகிறார்கள் எனலாம்.

சந்திரனும், சுக்கிரனும் நான்கில் தனித்து இருந்தால் அது அவர்களுக்கு திக் வலிமை மிகுந்துள்ளது என்று பொருள். இதுவல்லாமல் ஏழு, பத்தில் அவர்கள் இருக்க தனிக்க, அவர்கள் வலுவற்றவராய் போகின்றார்கள். அதிலும் பத்தாமிடத்திலோ அவர்கள் மிகவும் பலம் இழந்து போகின்றார்கள்.
ஆனால் இவர்கள் இலக்கின கேந்திரத்தில் நின்றால், ஆட்சியாவதால் இவர்களுக்கு ஏற்படும் கூடல் அல்லது பார்வையின்படி, இவர்கள் உயர் சுபராய் அல்லது அசுபராய் ஆவராம்.

சந்திரனோ அல்லது சுக்கிரனோ நான்காம் அதிபதியானால் அவர்கள் பூரண சுபர் ஆகின்றனர். இதில் சுக்கிரன் நான்காம் அதிபதியாகி அவரது இன்னொரு வீடு ஒன்பதாம் வீடு ஆனால், அவர் பூரண சுபராயும் - பதினோறாமிடமானால் அவர் பாவியாயும் ஆகின்றார் எனலாம்.
இது ஏன் என்பதை இன்னும் சற்று நேரத்தில் நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.
குருவும், புதனும் ஒன்றில் தனிக்க, அவர்கள் பூரண திக் வலு அடைந்து, உயர் பலனை அளிப்பராம். மேலும் அவ்வீட்டில் அவர்கள் நட்பு, ஆட்சி, உச்சம், நீச்ச பங்கம் ஆனால், இதனை உறுதியாய் சொல்லலாம்.  மாறாக பகை நீச்சம் ஆனால் சுமார் பலனை மட்டுமே தருவராம்.

குருவும் புதனும் நான்கு, ஏழு, பத்தில் தனித்து நிற்க, அவர்கள் நன்மை செய்யாராம். அதிலும் பகை, நீச்சமானால் நிச்சயம் தீமையே செய்வாராம்.
குருவோ அல்லது புதனோ லக்கினாதிபதி அல்லாத ஏழாமாதி அல்லது பத்தாமாதி ஆனால் அவர்கள் நிச்சயம் அசுபராம்.
அதிலும் அவர்கள் அசுபர் பாவத்தில் அசுபர்களுடன் சேர்ந்தோ அல்லது பார்வை பெற்றோ இருக்க நிச்சயம் மோசமான பலனை மட்டுமே செய்வாராம்.

அடுத்த பகுதியில் இன்னும் இதனை சிறப்பாக அறிந்து கொள்ளலாம்.

அன்பன்
அ.வீ.மாரிமுத்து
30 - 07 - 2016

No comments:

Post a Comment